திருகோணமலையில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்ப்பட்டுள்ளது.
நேற்று (மே-29) பி.பகல் வெளியான தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உள்ளடங்களாக 5 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் குறித்த காலப்பகுதியில் 73 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 73 பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,207ஆக அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் கூறியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை